

அரக்கோணம்
கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
அரக்கோணம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் பசுமாடு விழுந்து கிடப்பதாக அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிலைய அலுவலர் (போக்குவரத்து) ராஜசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, கழிவுநீர் தொட்டியில் இருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.