பாரம்பரிய கந்தூரி விழாவில் 15 ஆயிரம் பேருக்கு கறி விருந்து

பாரம்பரிய கந்தூரி விழாவில் 15 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
பாரம்பரிய கந்தூரி விழாவில் 15 ஆயிரம் பேருக்கு கறி விருந்து
Published on

நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தில் மிலாது நபி நிகழ்ச்சியின் நிறைவு நாளில் பாரம்பரிய கந்தூரி விழா கறிவிருந்து படைக்கும் நிகழ்ச்சி வீரசோழன் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. அப்போது 100-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி படைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த கறி விருந்திற்காக படைக்கப்பட்ட கிடாய்களின் தலைகள், கால்கள் ஏலம் விடப்பட்டது. கறிவிருந்து நிகழ்ச்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com