தலைக்கேறிய மதுபோதை.. சாலை தடுப்புச் சுவரில் அமர்ந்து யோகாசனம் செய்த நபர்

சாலை தடுப்புச் சுவரில் அமர்ந்து யோகாசனம் செய்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியில் மதுபோதையில் ஒருவர் யோகாசனம் செய்தார். தலைக்கேறிய மதுபோதையில் மேல்சட்டை எதுவும் அணியாமல் அந்த நபர் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி அமர்ந்து யோகாசனம் செய்துள்ளார்.
வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அந்த நபரின் செயல்பாடு இருந்தது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





