பூச்சி மருந்தை குடித்த விவசாயி சாவு

உத்தமபாளையம் அருகே நோய் குணமாக பூச்சி மருந்தை குடித்த விவசாயி பரிதாபமாக இறந்தார்
பூச்சி மருந்தை குடித்த விவசாயி சாவு
Published on

அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது42) விவசாயி. சசிக்குமார் வயிற்றில் பூச்சி கடிப்பதாக கூறி வந்தார். இதற்கு மருந்தாக, வாழை மரத்திற்கு அடிக்கும் பூச்சி மருந்தை கலக்கி குடித்துள்ளார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com