திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் தவறி விழுந்த சிறுமி சாவு

திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் தவறி விழுந்த சிறுமி சாவு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா. திருமணமாகி தனது கணவருடன் கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தில் வசித்து வந்தார். அவரது கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் புஷ்பா தனது தாயின் ஊரான எடையாத்தூர் கிராமத்திலேயே தங்கியிருந்து கூலி வேலை செய்துகொண்டு வசித்து வந்தார்.

இவரது மகள் தீபிகா (வயது 12). நேற்று எடையாத்தூர் பாலாற்றில் துணி துவைக்க சென்றார்.

அப்போது தீபிகா ஆற்றில் தவறி விழுந்து இறந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com