கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் சரத்குமார் (வயது 29), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் வெளியே சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள பயன்படுத்தாத ஒரு விவசாய கிணற்றில் சரத்குமாரின் உடல் பிணமாக மிதந்தது. அந்த வழியாக நடந்து சென்றபோது அவர் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com