வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

தலைமறைவு

சென்னையை அடுத்த மாதவரம் தணிகாசலம் நகர் நடேசன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(வயது 25). இவரை கடந்த 2015-ம் ஆண்டு பணத்துக்காகவும், தொழில் போட்டி காரணமாகவும் காஞ்சீபுரம் மாவட்டம் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த மகேஷ்(41) என்பவர் கடத்தி சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கடத்தப்பட்ட கார்த்திக்கை போலீசார் மீட்டனர். ஆனால் மகேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

கைது

இந்தநிலையில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த மகேஷ், நேற்று சென்னை பேசின்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக புழல் உதவி கமிஷனர் ஆதிமூலத்துக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று மகேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com