ரூ.14 லட்சத்தில் புதிய சிறுவர் பூங்கா

மேல்பட்டாம்பாக்கத்தில் ரூ.14 லட்சத்தில் புதிய சிறுவர் பூங்காவை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்.
ரூ.14 லட்சத்தில் புதிய சிறுவர் பூங்கா
Published on

நெல்லிக்குப்பம், 

மேல்பட்டாம்பாக்கத்தில் பேரூராட்சி சார்பில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா புதிதாக அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கி புதிய சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். வேல்முருகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி வரவேற்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கட்ராமன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சாதிகா, வார்டு கவுன்சிலர்கள் இலியாஸ், இத்ரீஸ், முத்து, மணிமேகலை, சுகுணா, மோகனவள்ளி, மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com