

சென்னை,
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினரை தமிழக அரசு அமைத்து இருக்கிறது. இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த 14-ந்தேதி கூடி ஆலோசனை நடத்தியது. நீட் தேர்வு குறித்து பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்யலாம் என்று இந்த குழு அறிவித்தது. அதன்படி, 23-ந்தேதி வரை தங்களுடைய கருத்துகளை தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ பதிவு செய்ய அவகாசமும் வழங்கப்பட்டு இருந்தது. அந்தவகையில், நேற்று முன்தினத்துடன் அந்த அவகாசம் முடிந்த நிலையில், 85 ஆயிரத்து 935 பேர் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்களுடைய கருத்துகளை பொதுமக்கள் பதிவு செய்துள்ளனர்.
குழுவின் அடுத்த கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துகள் ஆராயப்பட உள்ளன.