குன்றத்தூரில் லாரி சக்கரத்தில் சிக்கியவர் பலி

குன்றத்தூரில் லாரி சக்கரத்தில் சிக்கியவர் பலியானார்.
குன்றத்தூரில் லாரி சக்கரத்தில் சிக்கியவர் பலி
Published on

சரக்கு ஆட்டோ உரசியது

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கோபுரசநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 53). கலவை எந்திரத்தை சொந்தமாக வைத்திருந்தார். இவர் நேற்று தனது நண்பர் சங்கர்(54) என்பவருடன் குன்றத்தூர் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் உள்ள மீன் கடைக்கு சென்று மீன் வாங்கி கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சங்கர் ஓட்டிச்சென்றார். குன்றத்தூர் பஜார் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது எதிரே பழம் இறக்க வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது உரசியது.

சாவு

இதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி கணேசனின் உடல் மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். அவரது நண்பர் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ டிரைவர் மற்றும் லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com