போலி பட்டா வழங்கிய வழக்கில் ஒருவர் கைது

ஜோலார்பேட்டை அருகே போலி பட்டா வழங்கிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போலி பட்டா வழங்கிய வழக்கில் ஒருவர் கைது
Published on

ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் தசரதன் (வயது 34). இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த கோகுல் என்ற நாகராஜன் என்பவர் இலவசமாக வீட்டுமனை பட்டா வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பட்டா வழங்கி உள்ளார். இது சம்பந்தமாக தசரதன் கடந்த மே மாதம் 23-ந் கேட்டபோது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது நாகராஜனுக்கு ஆதரவாக சுப்பிரமணி, மைதிலி, ஜோதி, தியாகு ஆகியோர் சேர்ந்து தசரதனை திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து தசரதன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோகுல் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று தியாகு என்பவரை போலீசார் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com