மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பேடு அருகே உள்ள கங்கானிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 36). இவருக்கு திவ்யா (29) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்த தண்டபாணி, கடந்த மாதம் 25-ந் தேதி இரவு வேலை முடிந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சேகண்யம் கிராமத்தின் அருகே மோட்டார் சைக்கிள் செல்லும் போது, அப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற 2 நபர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அதனை ஓட்டிச் சென்ற தண்டபாணி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தண்டபாணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com