கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டி உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.
கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டி உயிருடன் மீட்பு
Published on

ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை அய்யனார்புரம் கிராமத்தில் சுந்தரம் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத கிணறு உள்ளது. இந்த கிணற்றில் பூவரசன் என்பவரது நாய்க்கு ட்டி தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையில், மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கிய தீயணைப்பு வீரர்கள் நாய்க்குட்டியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com