அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

சத்திரப்பட்டி அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
Published on

ராஜபாளையம்,

சத்திரப்பட்டி அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு பள்ளி

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளியில் சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த எண்ணற்ற மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போது அரசு பள்ளியில் ஆங்கில மொழி கல்வியும் தொடங்கப்பட்டு விட்டது. ஆதலால் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை.

விளையாட்டு மைதானம்

இந்த பள்ளிக்கு படிக்க வரும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் விளையாட்டு திறமை அதிகம் உள்ளவர்கள் ஆவர்.

அவர்களின் திறமையை வெளிப்படுத்த முறையான பயிற்சி எடுக்க மைதானம் இல்லை. பள்ளியின் எதிரே மைதானம் அமைக்க இடம் உள்ளது. ஆதலால் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 2 பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com