கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Published on

அய்யலூர் அருகே உள்ள எஸ்.குரும்பப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46). ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் பூவிழிச்செல்வன் (13). இவன், வளவிசெட்டிபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இவன், தனது நண்பர்களுடன் செக்கணத்துப்பட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளித்தான். ஆனால் நீச்சல் தெரியாததால், பூவிழிச்செல்வன் தண்ணீரில் மூழ்கினான். இதைக்கண்டு அவனது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் கிணற்றில் குதித்து பூவிழிச்செல்வனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவனை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பூவிழிச்செல்வன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com