வாலிபருக்கு அரிவாள் வெட்டு

சாணார்பட்டி அருகே, தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Published on

சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடையை சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (வயது 25.) சுமைதூக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அவரது உறவினரான சேசு ஆரோக்கியம் (30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சேசுஆரோக்கியம், அரிவாளால் ஜோசப் ராஜை வெட்டினார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சர்த்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீராஜூதீன் வழக்குப்பதிவு செய்து சேசு ஆரோக்கியத்தை கைது செய்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com