பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது

செந்துறை அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
Published on

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கும் அவரது அண்ணன்களான பரமசிவம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமசிவம் மகன் எழிலரசன் பொதுப் பாதையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து உள்ளார். இதனை தட்டிக்கேட்ட ராமச்சந்திரன் மனைவி அரும்புவை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமச்சந்திரனின் மகள்கள் ஏன் எங்களது பெற்றோரிடம் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த எழிலரசன் அண்ணன் நீலமேகம் மரம் வெட்ட வைத்து இருந்த அரிவாளால் அரும்பு தலையில் வெட்டினார்.இதில் பலத்த காயமடைந்த அரும்பு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நீலமேகம், எழிலரசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com