குடியாத்தம் அருகே ஒற்றை யானை அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்

குடியாத்தம் அருகே ஒற்றை யானை அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குடியாத்தம் அருகே ஒற்றை யானை அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
Published on

குடியாத்தம்

குடியாத்தம் அருகே ஒற்றை யானை அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கதிர்குளம் கிராமத்தில் இரவு நேரங்களில் ஒற்றை யானை விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஒற்றை யானை கதிர்குளம் கிராமம் அருகே உள்ள மேல்அனுப்பு கிராமத்தில் இரவு நேரங்களில் ஊருக்குள் நுழைகிறது.

இதனால் இரவு நேரங்களில் வேலைக்கு செல்பவர்களும் பள்ளி மாணவர்கள் டியூஷன் முடித்துவிட்டு ஊருக்கு வருவதற்கும் அச்சப்படுகின்றனர்.

ஊருக்குள் ஒற்றை யானை வராமல் தடுக்கவும் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com