வீட்டில் தூங்கிய தந்தை, மகளை பாம்பு கடித்தது

வீட்டில் தூங்கிய போது பாம்பு கடித்த தந்தை மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
வீட்டில் தூங்கிய தந்தை, மகளை பாம்பு கடித்தது
Published on

திருத்தணி, 

திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்கு உட்பட்ட வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் பாலாஜி (வயது 33). இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஜனப்ரியன், யுகி என்ற 2 மகன்களும், யுகிதா என்ற மகளும் உள்ளனர். யுகிதா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலாஜி தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு பாலாஜியையும் அவரது மகள் யுகிதாவையும் கடித்தது.

இதில் விஷம் ஏறியதால் அவர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தனர். கணவர் மற்றும் மகள் இருவரும் வாயில் நுரையுடன் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்த ராதா தனது உறவினர்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கு பாலாஜி, அவரது மகள் யுகிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com