விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

போடியில் விவசாயி வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.
விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
Published on

போடி கீழத் தெரு சர்ச் தெருவை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவரது வீட்டில் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி அங்கு பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com