வியாபாரி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

நத்தத்தில் வியாபாரி வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.
வியாபாரி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
Published on

நத்தம் அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது யூசுப். (வயது 45). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரது வீட்டுக்குள் நல்லபாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் தலைமையில் படை வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் 1 மணி நேரம் போராடி, வீட்டில் ஒரு அறையில் பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். பின்பு அந்த பாம்பை நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டது. அவர்கள் நத்தம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com