வாடிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஆசிரியர் பலி

வாடிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
வாடிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஆசிரியர் பலி
Published on

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

பள்ளி ஆசிரியர்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை ரோட்டில் குடியிருந்து வருபவர் சந்தன சாமி. இவரது மகன் ராஜா(வயது 40). மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கிரேசி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு வாடிப்பட்டி அருகே தனிச்சியத்தில் உள்ள ஒரு கிணற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார்.

தவறி விழுந்தார்

கிணற்றில் குளித்துவிட்டு கிணற்றுமேட்டு ஒரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றில் இறங்கி 2 மணி நேரத்திற்கு பின் அவரது உடலை பிணமாக மீட்டனர். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com