ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் படுகாயம்

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் படுகாயம் ஏற்பட்டது.
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் படுகாயம்
Published on

கடலூர் முதுநகர், 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த சேந்தங்குடியை சேர்ந்தவர் சக்தி மகன் முத்துராஜ் (வயது 27). சம்பவத்தன்று இவர் காரைக்காலில் இருந்து திருவாரூர் வழியாக சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் விழுப்புரத்துக்கு புறப்பட்டார். முத்துராஜ் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக தொகிறது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது முத்துராஜ் எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் முத்துராஜை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதுநகர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com