நீச்சல் பழகசென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலி

ஜோலார்பேட்டை அருகே நீச்சல் பழகசென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலியானார்.
நீச்சல் பழகசென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலி
Published on

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிலம்பரசன் (வயது 27). இவர் புக்கா வட்டம் பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். அங்கு கிணற்றில் குதித்தவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். உடனடியாக இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி சிலம்பரசனை பிணமாக மீட்டனர். மேலும் தகவல் இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com