சென்னை வானகரத்தில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை வானகரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிளைவுட் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து
Published on

சென்னை,

சென்னை வானகரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிளைவுட் குடோனில் இன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. சமையல் எண்ணெய் குடோனில் பரவிய நெருப்பு, பிளைவுட் குடோன் உள்பட 3 இடங்களில் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி உள்பட 6 நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பிளைவுட் , எண்ணெய் உள்ளிட்டவை கொண்ட குடோன்கள் என்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com