விபத்தில் பெண் பலி

அருப்புக்கோட்டை அருகே விபத்தில் பெண் பலியானார்.
விபத்தில் பெண் பலி
Published on

அருப்புக்கோட்டை, 

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 36). இவருடைய மனைவி மாரியம்மாள் (30). இவர்கள் 2 பேரும் அருப்புக்கோட்டை அன்பு நகரில் உள்ள அவரது உறவினர் இல்ல விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது அருப்புக்கோட்டை - விருதுநகர் சாலையில் துணை மின் நிலையம் அருகே முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி தனியார் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் யோகலட்சுமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் மாரியம்மாளின் மீது லாரியின் டயர் ஏறி இறங்கியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் ராஜாவும், யோகலட்சுமியும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com