சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி
Published on

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட விஞ்சியம் பாக்கம், ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது வீடு புதியதாக அமைக்கப்பட்ட 3-வது ரெயில்வே தண்டவாளத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல இவர் வெளியே செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நாகர்கோவில் இருந்து-தாம்பரம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியது. இதில் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com