தங்கை திருமணத்திற்கு செல்ல கணவர் அனுமதிக்காததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தங்கை திருமணத்திற்கு செல்ல கணவர் அனுமதிக்காததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கை திருமணத்திற்கு செல்ல கணவர் அனுமதிக்காததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

தங்கை திருமணத்திற்கு அனுமதிக்காததால்...

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மெய்யூரை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமார் (வயது 30). இவரும் செங்கல்பட்டை சேர்ந்த திவ்யா (26) என்ற பெண்ணும் காதலித்து 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் திவ்யாவின் தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு கல்யாண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் ராஜ்குமார் தனது மனைவி திவ்யாவை தங்கை திருமணத்திற்கு செல்ல கூடாது என கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த திவ்யா நேற்று முன்தினம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து திவ்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து திவ்யாவின் தாய் படாளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்குப்பதிவு செய்து திவ்யா உடலை பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தார். மேலும் திவ்யா தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com