இளம்பெண் மாயம்

ஒச்சேரி அருகே இளம்பெண் மாயமானார்.
இளம்பெண் மாயம்
Published on

ஒச்சேரி பகுதியை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். இவருடைய தாய், தந்தை இறந்துவிட்டதால் தனது அக்காள் வீட்டில் வசித்துவந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com