கூடலூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கூடலூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடலூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கூடலூரை அடுத்த கன்னிகாளிபுரம், மேட்டுக்களம் தெருவை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 22). இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் விஜயகுமாரை பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்தநிலையில் நேற்று காலை கூடலூர் மேற்கு புறவழிச்சாலையில் உள்ள தனியார் புளியந்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் விஜயகுமார் சேலையால் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அறிந்ததும் அங்கு வந்த விஜயகுமாரின் பெற்றோர் கதறி அழுதனர். இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com