அறையில் காதலனுடன் சேர்ந்து மதுகுடித்த இளம்பெண்... கழிவறைக்கு சென்றபோது ஏற்பட்ட விபரீதம்

இளம்பெண் வேலை முடிந்ததும் காதலன் கணேஷ்ராம் தங்கி உள்ள அறைக்கு வந்துள்ளார்.
அறையில் காதலனுடன் சேர்ந்து மதுகுடித்த இளம்பெண்... கழிவறைக்கு சென்றபோது ஏற்பட்ட விபரீதம்
Published on

போரூர்,

ராயப்பேட்டையை சேர்ந்த 26 வயது இளம்பெண் நந்தனத்தில் உள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுரவாயல், அடுத்த ஆலபாக்கம் பகுதியில் வசித்து வரும் கணேஷ்ராம் என்பவருக்கும் - இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாகமாறியது. என்ஜினீயரிங் பட்டதாரியான கணேஷ்ராம் சினிமா டைரக்டர் ஆக முயற்சி செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் சேலம் ஆகும்.

நேற்று மாலை இளம்பெண் வேலை முடிந்ததும் காதலன் கணேஷ்ராம் தங்கி உள்ள அறைக்கு வந்தார். பின்னர் இருவரும் ஒன்றாக - மதுகுடித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்கள் சிக்கன் கறி சமைத்து சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் இளம் பெண்ணுக்கு வாந்தி ஏற்பட்டது. அவர் கழிவறைக்கு சென்றபோது கீழே விழுந்தார். இதில் நெற்றியில் பலத்த காயம் அடைந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் கணேஷ்ராம் இதுகுறித்து போலீசாருக்கும், இளம்பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் இளம்பெண் சாவில் மர்மம் நீடித்து வருகிறது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து வீட்டில் இருந்த காதலன் கணேஷ்ராமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவை வைத்து அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com