உடலில் பெட்ரோல் ஊற்றி 2-வது கணவர் வீட்டு முன் தீக்குளித்த இளம்பெண்

திருவள்ளூர் மாவட்டத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி 2-வது கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தீக்குளித்தார்.
உடலில் பெட்ரோல் ஊற்றி 2-வது கணவர் வீட்டு முன் தீக்குளித்த இளம்பெண்
Published on

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை காஞ்சீபுரம் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் துளசி (வயது 28). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் வேலூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்த குப்பன் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பூமிகா என்ற மகளும், ஜெகன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவர் தினமும் மது குடித்து விட்டு வந்து சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறுத்தியதால் 5 ஆண்டுகளுக்கு முன் அவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அதன் பிறகு 2018 ஆண்டு முதல் துளசி சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அங்கு என்ஜினீயராக வேலை பார்த்து வந்த பள்ளிப்பட்டு அருகே புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த முகேஷ் (28) என்பவரை காதலித்து கடந்த 2021-ம் ஆண்டு அவரது நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து காட்பாடியில் தனிக்குடித்தனம் இருந்தார்.

திருமணம் செய்ததை தனது குடும்பத்தினர் விரும்பவில்லை என்று கூறி முகேஷ் அங்கிருந்து தன்னுடைய வீட்டுக்கு வந்து விட்டார். பலமுறை போன் செய்தும் முகேஷ் மற்றும் அவரது பெற்றோர் சரியான பதில் சொல்லாததால் துளசி நேற்று முன்தினம் முகேஷ் வீட்டுக்கு பெட்ரோல் கேனுடன் சென்றார். அவரது வீட்டு முன் தன்னுடய உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com