ஆடி அமாவாசை; தடையை மீறி வைகை ஆற்றில் குவிந்த மக்கள்

ஆடி அமாவாசையொட்டி வைகை ஆற்றில் தடையை மீறி மக்கள் குவிந்தனர்.
ஆடி அமாவாசை; தடையை மீறி வைகை ஆற்றில் குவிந்த மக்கள்
Published on

மதுரை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை நுழைந்துவிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டு உள்ளார். அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிற 23-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நடைமுறையில் உள்ளது. ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆடி அமாவாசையையொட்டி முதியோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கடற்கரை மற்றும் நீர் நிலைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஆடி அமாவாசையையொட்டி முதியோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக மதுரை சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் வைகை ஆற்றில் தடையை மீறி குவிந்தனர். தடையை மீறி குவிந்த மக்களை போலீசார் எச்சரித்து வெளியேற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com