தோஷம் கழிப்பதாக பெண்ணிடம் 2½ பவுன் நகை அபேஸ்

மணவாளக்குறிச்சி அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 2½ பவுன் நகைஅபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக குறி சொல்வதாக வந்த ஆசாமியை போலீஸ் தேடி வருகிறார்கள்.
தோஷம் கழிப்பதாக பெண்ணிடம் 2½ பவுன் நகை அபேஸ்
Published on

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 2 பவுன் நகைஅபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக குறி சொல்வதாக வந்த ஆசாமியை போலீஸ் தேடி வருகிறார்கள்.

தோஷம் கழிப்பதாக...

மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளை சிவந்தமண் பகுதியை சேர்ந்தவர் புஷ்பாகரன். இவருடைய மனைவி சசிகலா (வயது 47). இவர்களின் மகள் சாலினி (24). புஷ்பாகரன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சசிகலா வீட்டு வேலை செய்து வருகிறார். சாலினிக்கு திருமணமாகி தாயார் சசிகலாவுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவும், சாலினியும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர், தான் குறி சொல்வதாக கூறி சசிகலாவிடம் கையை நீட்ட சொன்னார். உடனே அவர் கையை நீட்டியதும் 'வீட்டில் தோஷம் இருக்கிறது. அதை கழிக்க தண்ணீர் கொண்டு வாருங்கள்' என்றார். உடனே சசிகலா வீட்டுக்குள் சென்று செம்பில் தண்ணீர் எடுத்து வந்தார். அந்த தண்ணீரில் மஞ்சள், பச்சரிசி, புளி ஆகியவற்றை போட சொன்ன ஆசாமி, சாலினியின் காலில் அணிந்திருந்த 2 பவுன் எடையுள்ள ஒரு ஜோடி தங்க கொலுசையும் கழற்றி போட சொன்னார். அதன்படி சாலினியும் தங்க கொலுசை கழற்றி செம்பில் போட்டார்.

தங்க கொலுசு அபேஸ்

அந்த மர்ம ஆசாமி தோஷம் நீக்குவது போல் நாடகமாடி, சசிகலா, சாலினி ஆகியோரின் கவனத்தை திசை திருப்பி செம்புக்குள் கிடந்த தங்க கொலுசை ஆசாமி அபேஸ் செய்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து செம்பில் போட்ட தங்க கொலுசை தேடிய போது காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா அப்பகுதி முழுவதும் மர்ம ஆசாமியை தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சசிகலா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com