மூதாட்டியிடம் நூதன முறையில் 8 பவுன் நகை அபேஸ்

மூதாட்டியிடம் நூதன முறையில் 8 பவுன் நகை அபேஸ்
மூதாட்டியிடம் நூதன முறையில் 8 பவுன் நகை அபேஸ்
Published on

தஞ்சை ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 65). சம்பவத்தன்று இவர் வெளியில் சென்று விட்டு ஏ.ஒய்.ஏ. நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மர்மநபர்கள் மூதாட்டியை நிறுத்தி அவரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது இந்த பகுதியில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதிக நகைகளை போட்டுக்கொண்டு செல்வது பாதுகாப்பு இல்லை. அதனால் எங்களிடம் கொடுங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருவதாக கூறியுள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பிய சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் நகைகளை கழற்றி அந்த மர்மநபர்களிடம் கொடுத்துள்ளார். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மாமநபர்கள் அந்த நகைகளை எடுத்துகொண்டு அதற்கு பதிலாக கற்களை வைத்து கொடுத்துள்ளனர். இதனை அறியாத அவர் பையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது நகைகளுக்கு பதிலாக கற்களை வைத்து மர்மநபர்கள் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com