காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா அப்துல் கலாம் - கமல்ஹாசன்

அப்துல் கலாம் பிறந்தநாளான இன்று கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா அப்துல் கலாம் என பதிவிட்டுள்ளார்.
காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா அப்துல் கலாம் - கமல்ஹாசன்
Published on

சென்னை,

இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினமாகும். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் என கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அப்துல் கலாம் நேரிய வழியில் உழைத்து உயர முடியுமென நிரூபித்தவர். அவர் இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர்.

பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம். அவருடைய பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம் என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com