திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

சீதபற்பநல்லூர் பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(எ) சங்கர் (வயது 38) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 3 மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலசுப்பிரமணியன்(எ) சங்கரை சீதபற்பநல்லூர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில், நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story






