காரிமங்கலம் அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி இமாம் பலி

காரிமங்கலம் அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி இமாம் பலி
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே சாலையோரம் பஞ்சராகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி மசூதி இமாம் பலியானார்.

இமாம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சப்பாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முகமது பயாஸ் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள மசூதியில் இமாம் ஆக இருந்தார்.

இவருக்கு திருமணமாகி சபியா (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் முகமது பயாஸ் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விசாரணை

அப்போது மொரப்பூரில் உள்ள மேம்பாலத்தில் சரக்கு லாரி பஞ்சராகி நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத முகமது பயாஸ் சரக்கு லாரியின் பின்புறத்தில் மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காரிமங்கலம் போலீசார் முகமது பயாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com