கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு

கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு
Published on

மொரப்பூர்:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் குமார் (வயது 48) எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று தர்மபுரியில் இருந்து வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஆலமரத்துப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com