புதுச்சத்திரம் அருகே அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

புதுச்சத்திரம் அருகே அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
புதுச்சத்திரம் அருகே அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
Published on

திருவண்ணாமலையில் இருந்து நாமக்கல்லுக்கு கோழி தீவனத்திற்கு பயன்படும் குருணை அரிசி 6 டன் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி நேற்று காலை நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் கோகுல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை மற்றொரு லாரியில் மாற்றி, லாரியை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com