பரமத்தி அருகே மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி டிரைவர் பலி

பரமத்தி அருகே மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி டிரைவர் பலி
பரமத்தி அருகே மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி டிரைவர் பலி
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா நடந்தை பெரியசூரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் பிரபு (வயது 22). சரக்கு ஆட்டோ டிரைவர். திருமணமாகவில்லை. பிரபு சரக்கு ஆட்டோவை பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி பகுதியில் நிறுத்தி வாடகைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபு வீட்டில் இருந்து பரமத்தி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் அர்த்தனாரிபாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் மேட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பரமத்தி போலீசார் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com