தொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையில் கவிழ்ந்தது

கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுரை மாவட்டத்துக்கு ராட்சத இரும்பு பைப்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஜமீன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார்.

லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் இணைந்து டிரைவர் ராம்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான லாரியை போலீசார் உதவியோடு மீட்புக்குழுவினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுதொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com