பேரிகை அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலிஒருவர் படுகாயம்

பேரிகை அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலிஒருவர் படுகாயம்
Published on

சூளகிரி:

பேரிகை அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மாதி கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகினர்.ஒருவர் படுகாயம் அடைந்தார்.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). விவசாயி. இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பேரிகை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதேபோல் பாகலூர் முனீஸ்வர் நகரை சேர்ந்த சதீஷ் (25), பேரிகை அருகே குடி சாதனப்பள்ளியை சேர்ந்த தேஜஸ் (26) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் பேரிகை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பேரிகை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனம் பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் நாகராஜ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தனர்.

விசாரணை

தேஜசுக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பேரிகை போலீசார் தேஜசை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இறந்த நாகராஜ், சதீஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com