தொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்

தொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்
Published on

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

லாரி கவிழ்ந்தது

மராட்டிய மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வெங்காய பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் அரசன்குடி பகுதியை சேர்ந்த டிரைவர் விஷால் (வயது 30) என்பவர் ஒட்டி வந்தார்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று அதிகாலை லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விசாரணை

இந்த விபத்தில் இடிபாடுகளில் லாரி டிரைவர் சிக்கி தவித்தார். விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விஷாலை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான லாரியை போலீசார் உதவியோடு மீட்புக்குழுவினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com