

சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஏழைகளின் நலனுக்காக 12 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகள்..!
25 கோடி மக்கள் பன்முக வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.
58.15 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
44 கோடி ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
15.7 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
10 கோடிக்கும் மேற்பட்ட உஜ்வாலா LPG இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
2.9 கோடி குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஜன்தன் கணக்குகளில் ₹3 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட சேமிப்புத் தொகை உள்ளது.
அடல் பென்ஷன் யோஜனாவில் 9 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
பிரதம மந்திரி பாதுகாப்பு பீமா யோஜனாவில் 58 கோடிக்கும் மேற்பட்டோர் விபத்து காப்பீட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
12 ஆண்டுகள் — நம்பிக்கை, வளர்ச்சி, மக்கள் நலன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.