பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகலெக்டர் எச்சரிக்கை

மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகலெக்டர் எச்சரிக்கை
Published on

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தொழில் நிறுவனங்கள்

கடலூர் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுநாள் வரை சுற்றுலாத்துறையில் பதிவு செய்யாமல், பல சுற்றுலா தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் (படுக்கை மற்றும் காலை உணவு, ஹோம்ஸ்டே நிறுவனங்கள், கேரவன் சுற்றுலா ஆபரேட்டர்கள், கேரவன் பார்க் ஆபரேட்டர்கள், கேம்பிங் ஆபரேட்டர்கள், சாகச சுற்றுலா ஆபரேட்டர்கள்) மற்றும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் www.tntourismtors.com என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

நடவடிக்கை

பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் மாவட்ட சுற்றுலா அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலகம், ரெயில்வே பீடர்ஸ் ரோடு, சிதம்பரம் என்ற முகவரியிலும், touristofficecdm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், 04144- 238739, 89398 96399 ஆகிய தொலைபேசி எண்ணிகளிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com