உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க நடவடிக்கை: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

உரிமை கோரப்படாத தனித்தேர்வர்கள் எழுதிய பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலை அழிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
சென்னை,
பள்ளிப்படிப்பை முறையாக முடிக்காமல், 8, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுவதற்காக ஏற்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொள்ளும். இந்த நடைமுறையில், கல்வியை இடையில் நிறுத்தியவர்கள் அல்லது முதல்முறையாக பொதுத்தேர்வை தனித்தேர்வுகளாக எழுத விரும்புபவர்கள் தனித்தேர்வர்களாக கருதப்படுவார்கள். இந்தநிலையில் தனித்தேர்வர்கள் எழுதிய பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலை அழிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2014-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான பிளஸ்-2 பொதுத் தேர்வு மற்றும் துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்களின் உரிமைக் கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






