

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சென்னை திரும்பினார். இன்று காலை தனது குடும்பத்தினருடன் அண்ணாத்த திரைப்படத்தைப் பார்த்ததாக ஹூட் செயலியில் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் வழக்கமான உடல்நிலை பரிசோதனைக்காகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த பூரண நலத்துடன் உள்ளதாகவும், பரிசோதனை முடிந்து விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.