நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்த வனிதா வெளியேற்றம் சுப்ரீம் கோர்ட்டு வழக்கை சுட்டிக்காட்டி போலீசார் நடவடிக்கை

நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்த அவருடைய மகள் வனிதாவை போலீசார் வெளியேற்றினார்கள்.
நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்த வனிதா வெளியேற்றம் சுப்ரீம் கோர்ட்டு வழக்கை சுட்டிக்காட்டி போலீசார் நடவடிக்கை
Published on

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகர் 19-வது தெருவில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீடு சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் விஜயகுமாரின் மகள் வனிதா படப்பிடிப்பு நடத்த வேண்டும் எனக்கூறி இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார்.

ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகும் அந்த வீட்டை அவர் காலி செய்யவில்லை. இதனால் நடிகர் விஜயகுமார் இதுபற்றி மதுரவாயல் போலீசிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றினர். அப்போது வனிதாவின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் வனிதா மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வனிதா, தனது வக்கீலுடன் அந்த பங்களாவுக்கு வந்தார். வீட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்ற அவர் தனது மகளுடன் வீட்டில் தங்கியிருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார், கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறும்போது வீட்டுக்குள் வந்தது ஏன்? என்பது பற்றி கேட்டனர். தன்னிடம் இருந்த சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசை வனிதா போலீசாரிடம் காண்பித்ததால் அவர்கள் அங்கு இருந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com