தொடர் விடுமுறையை முடித்து செல்பவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கம்

தொடர் விடுமுறையை முடித்து செல்பவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.
தொடர் விடுமுறையை முடித்து செல்பவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கம்
Published on

சுதந்திர தின விழாவையொட்டி கடந்த 13-ந் தேதி முதல் நேற்று வரை தொடர் விடுமுறையை முடித்து பொதுமக்கள் அவரவர் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மேற்கண்ட ஊர்களின் பஸ் நிலையங்களில் இருந்து இன்றும், நாளையும் (செவ்வாய், புதன்கிழமை) கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பஸ்களின் இயக்கத்தை முன்னிட்டு முக்கிய பஸ் நிலையங்களில் பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை ஏற்பாடு செய்திடவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ஜோசப்டயஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com